
Vivekanandarin Veera Mozhigal Volume - 5 (Tamil)
₹ 180.00
Tags:
இறைவனின் திருக்கரங்களில் தெய்வீகக் கருவியாக இருந்து மக்களின் தெய்வீக இயல்பை அவர்கள் மீண்டும் உணரச் செய்கின்ற பணியைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் ஆவார். இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் அறியாமையில் ஆழ்ந்திருந்த மனிதர்களைத் தனது ஆன்மீக சக்திமிக்க சொற்பொழிவுகள் மூலம் தட்டியெழுப்பினார். ‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய தொகுப்பு நூல்களே இவை. இந்தப் பகுதியில்(பகுதி – 5) அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக்கொடியை நிலைநாட்டிவிட்டு சுவாமிஜி இந்தியா திரும்பியபோது இலங்கையிலும், பின்னர் தமிழ்நாடு, வங்காளம், உத்திரப் பிரதேசம், பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப், ராஜஸ்தான், பங்களாதேஷ் முதலிய இடங்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகள். இவையே ‘கொழும்பு முதல் அல்மோரா வரை...’ என்ற தலைப்பில் உள்ள 30 சொற்பொழிவுகளாகும்.
Delivery
Product Details
Columbuvilirudu Almora varai